தனமல்வில, சமாதிகம பிரதேசத்தில் கடந்த 10ஆம் திகதி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு
கொலை செய்யப்பட்ட நபரின் சடலமொன்று மீட்கப்பட்டிருந்தது.
தலையில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு குறித்த நபர் கொலை உயிரிழந்துள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்திருந்தது.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்த நபருடன் தொடர்பு வைத்திருந்த முன்பள்ளி ஆசிரியை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் இருந்து சிதைக்கப்பட்ட நிலையில் அலைபேசி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவர் வெல்லவாய நீதிமன்றில் நேற்று (12) முன்னிலைப்படுத்தப்பட்டு இன்று (13) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொல்லபட்ட சம்பவத்தில் முன்பள்ளி ஆசிரியை கைது.
Reviewed by Madawala News
on
January 13, 2020
Rating: