பாதிக்கபட்ட சீன பெண் நோயாளி தங்கியிருந்த இடங்கள், ஹோட்டல்களுக்கு அமைச்சர் மற்றும் அதிகாரிகள் விஜயம்.
கொரோனா வைரஸ் கண்டறியப்படுவதற்கு முன்னர் குறிப்பிட்ட சீன பெண் நோயாளி தங்கியிருந்த இடங்கள்,
ஹோட்டல் தொடர்பாக அவதானங்களை மேற்கொண்டு வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளன. மேலும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
, இலங்கைக்கு விஜயம் செய்த குழு ஒன்றில் குறிப்பிட்ட சீன பெண் அங்கம் வகிப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜசிங்க தெரிவித்தார்.
அவர் இலங்கையை விட்டு வெளியேறவிருந்தபோது பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.
டாக்டர் அனில் ஜசிங்க, அவர் பயணம் செய்த குழு மீண்டும் சீனாவுக்குச் சென்ற நிலையில், அவர் அங்கோடாவில் உள்ள தொற்று நோய்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் தங்கியிருந்த ஹோட்டல்களுக்கு சுகாதார அமைச்சக அதிகாரிகளும் மாகாண சுகாதார அதிகாரிகளும் பார்வையிட்டுள்ளதாகவும், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவர்களுக்கு அறிவுறுத்தியதாகவும் அவர் கூறினார்.
நோயாளி மீது மேலும் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று டாக்டர் அனில் ஜசிங்க கூறினார்.
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி மற்றும் டாக்டர் அனில் ஜசிங்க ஆகியோர் நேற்று இரவு (திங்கட்கிழமை) விமான நிலையத்திற்கு வருகை தந்து, சீனாவில் வேகமாக பரவி வரும் வைரஸ் உள்ள எவரையும் கண்டறியும் இடத்தில் உள்ள வசதிகளை ஆய்வு செய்தனர்.
அத்துடன் இந்த பெண்ணின் இரத்த மாதிரியை மேலதிக பரிசோதனைக்காக வெளிநாடு ஒன்றுக்கு அனுப்புவற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பாதிக்கபட்ட சீன பெண் நோயாளி தங்கியிருந்த இடங்கள், ஹோட்டல்களுக்கு அமைச்சர் மற்றும் அதிகாரிகள் விஜயம்.
Reviewed by Madawala News
on
January 28, 2020
Rating: