ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவு சம்பவங்களின் பின்னணியில் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவர் ...
பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய
குரல் பதிவுகள் தொடர்பில் அரச இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
குரல் பதிவுகளை அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு வழங்கி, அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறு நுகேகொட மஜிஸ்திரேட் நீதிமன்றம் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு உத்தரவிட்டிருந்தது.
இதேவேளை, ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவு சம்பவங்களின் பின்னணியில் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவர் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது இதுதொடரபாக மேலும் தெரிவிக்கையில் . ரஞ்சன் ராமநாயக்கவின் இந்த செயற்பாடுகளுக்கு ஊக்கமளிக்கப்பட்டுள்ளது. அதனால், விசாரணை நடத்த வேண்டுமானால், ரணில் விக்ரமசிங்க, தொடர்பிலும் விசாரிக்கப்பட வேண்டுமென இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)
ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவு சம்பவங்களின் பின்னணியில் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவர் ...
Reviewed by Madawala News
on
January 14, 2020
Rating: