தனக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக அச்சுறுத்தி வீடொன்றில் நகை கொள்ளை அடித்து சென்ற திருடன்.
காலி பிரதேசத்தில் நேற்று இரவு வீடு ஒன்றுக்குள் நுழைந்த திருடன் அங்கு பொருட்களை திருடும்
போது வீட்டிலுள்ளவர்கலிடம் சிக்கி உள்ளான்.
இந்நிலையில் குறிப்பிட்ட திருடன் தனக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாகவும் .
எனது அருகில் வந்தால் உங்களுக்கும் அது பரவும் என எச்சரித்து வீட்டில் உள்ளவர்களை அச்சுறுத்தி தம்மை நெருங்கவிடாமல் செய்து அவ் வீட்டில் இருந்த தங்க நகைகள் சிலவற்றையும் கொள்ளையடித்து சென்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
தனக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக அச்சுறுத்தி வீடொன்றில் நகை கொள்ளை அடித்து சென்ற திருடன்.
Reviewed by Madawala News
on
January 28, 2020
Rating: