பொதுத்தேர்தலின் பின்னர் வலுவான அரசாங்கத்தை ஐக்கிய தேசியக் கட்சி அமைக்கும்.


எதிர்வரும் பொதுத்தேர்தலின் போது கட்சியில் உள்ள அனைவரும் ஒன்றாக இணைந்து வெற்றிக்கான
நடவடிக்கையை எடுக்க போவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் வைத்து அண்மையில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

அடுத்த பொதுத்தேர்தலின் பின்னர் வலுவான அரசாங்கத்தை ஐக்கிய தேசியக் கட்சியால் அமைக்க முடியும். 2015ஆம் ஆண்டில் நாங்கள் ஆட்சி அமைப்போம் எனக் கூறிய போது சிரித்தனர்.

முடிந்ததையே கூறுகிறேன். ஒன்றாக இணைந்து தேசிய கொள்கையின் அடிப்படையில் முன்நோக்கி சென்றால் வெற்றி பெற முடியும்.

ரணில், கரு, சஜித் என அனைவரும் கைகோர்த்து கொண்டு நாங்கள் செய்ய போகிறோம் என்பதை காட்டுகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
பொதுத்தேர்தலின் பின்னர் வலுவான அரசாங்கத்தை ஐக்கிய தேசியக் கட்சி அமைக்கும். பொதுத்தேர்தலின் பின்னர் வலுவான அரசாங்கத்தை ஐக்கிய தேசியக் கட்சி அமைக்கும். Reviewed by Madawala News on January 29, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.