குறைந்த விலைக்கு அமெரிக்க டொலர்.... இலட்சக்கணக்கான பணத்துடன் 7 பேர் கைது. #திருகோணமலை பொலிஸ்


திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட உவர்மலை பிரதேசத்தில் சந்தை
பெறுமதியை விட குறைந்த விலைக்கு டொலர் மாற்றித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட ஏழு சந்தேக நபர்களை கைது செய்ததாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து பத்து லட்சம் ரூபாய் ரொக்கமும் ரூபாய் ஒரு லட்சத்து என் பத்து ஐயாயிரம் பெறுமதியான ஆயிரம் அமெரிக்கா டொலரும் மீட்கப்பட்டதாக தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் நுவரெலியா மாவட்டம் தலவாக்கலை பிரதேசத்தைச் சேர்ந்த நால்வரும், பொலநறுவை மாவட்டம் மெதலகிரி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும், திருகோணமலை மாவட்டம் செல்வநாயகபுரம் மற்றும் வான்அலை பிரதேசங்களைச் சேர்ந்த தலா ஒருவரும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இம் மோசடி வேலை நிமித்தம் பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டி ஒன்றும் கார் ஒன்றும் கைப்பற்றப்பட்ட பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் அவர்கள் தெரிவிக்கையில்,

குறித்த மோசடியாளர் கந்தளாய் பிரதேச நபர் ஒருவரை தொடர்பு கொண்டு தம்மிடம் அமெரிக்க டொலர்கள் இருப்பதாகவும் டொலர்களை சந்தை மதிப்பை விட குறைந்த விலைக்கு வாங்க முடியும் என பேரம் பேசி கந்தளாய் நபரை வரவழைத்து அவரிடமிருந்து பத்து லட்சம் ரூபாயை பறித்துக்கொண்டு ஓடிய நிலையில் பணம் பறிகொடுத்த நபரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய தலைமையக பொலிஸாரின் துரித நடவடிக்கை மேற்கொண்டு குறித்த நபர்கள் பிடிக்கபட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

-திருகோணமலை கீத் / Derana
குறைந்த விலைக்கு அமெரிக்க டொலர்.... இலட்சக்கணக்கான பணத்துடன் 7 பேர் கைது. #திருகோணமலை பொலிஸ் குறைந்த விலைக்கு அமெரிக்க  டொலர்.... இலட்சக்கணக்கான பணத்துடன் 7 பேர் கைது. #திருகோணமலை பொலிஸ் Reviewed by Madawala News on January 13, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.