உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைதான காத்தான்குடியைச் சேர்ந்த 61 பேருக்கும் மீண்டும் விளக்கமறியல்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய தௌஹீத் ஜமாத் இயக்கத்துடன் தொடர்புபட்டதாக
கைது செய்யப்பட்ட 61பேரின் விளக்கமறியல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது அத்துடன் இருவருக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது.
நுவரேலியாவிலுள்ள தேசிய தௌஹீத் ஜமாத் தலைமைகத்தில் ஆயுதப் பயிற்சி பெற்றதாகச் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட காத்தான்குடியை சேர்ந்தவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இன்று 28ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட பதில் நீதவான் எஸ்.தியாகேஸ்வரன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் ஜனவரி 28ஆம் திகதி வரையான விளக்கமறியல் உத்தரவினை பிறப்பித்தார்.
மொத்தமாகக் கைது செய்யப்பட்ட 64 பேரில் ஏற்கனவே மூவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைதான காத்தான்குடியைச் சேர்ந்த 61 பேருக்கும் மீண்டும் விளக்கமறியல்.
Reviewed by Madawala News
on
January 28, 2020
Rating: