35 வருடங்கள் கல்விப்பணியாற்றி இன்றோடு ஓய்வு பெறுகிறார்
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஆரம்பக்கல்வி உதவிக் கல்விப்பணிப்பாளர் IM.இப்றாஹீம் (BA) சேர்.
காத்தான்குடியை அண்டிய கிராமமான பாலமுனை மண்ணில் பிறந்து ஆசிரியப்பணியில் தன்னை இணைத்துக்கொண்டு பல்வேறு மாணவர்களை உருவாக்கி பின்னர் அதிபராகவும்,மட்டக்களப்பு கல்வி வலயத்தின் சேவைக்கால ஆசிரிய ஆலோசகராகவும் பின்னர் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஆரம்பக்கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளராகவும் மொத்தமாக 35 வருடங்கள் கல்விக்காக பணி செய்து இன்றைய தினம் ஓய்வு பெறுகின்ற இப்றாஹிம் சேர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
மிக நீண்டகால கல்விப்பணியோடு, சமூகப்பணியும் விரும்பி செய்திட்ட ஒரு கல்வி அதிகாரி.
உங்களின் கல்விப்பணியும் சமூகப்பணியும் தொடர்ந்திடவும்,உங்கள் ஓய்வூதியக்காலம் மகிழ்ச்சிகரமாக அமைந்திடவும் பிரார்த்திக்கிறோம்.
35 வருடங்கள் கல்விப்பணி.. இன்று ஓய்வு பெறுகிறார் IM.இப்றாஹீம் (BA) சேர்.
Reviewed by Madawala News
on
January 13, 2020
Rating: