காலி வீதி இரத்மலானையில் அமைந்துள்ள நகைக்கடை ஒன்றில் கடந்த 13ம் திகதி நுழைந்த சிலர் ஆயுதங்களை
காட்டி நகை கடை ஊழியர்களை அச்சுறுத்தி அங்கிருந்து சுமார் 21 இலட்சம் பெறுமதியான நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் கல்கிஸ்ஸ போலீசாரால் விசாரிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் போலீசார் மற்றும் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் 8 சந்தேக நபர்கள் நேற்றையதினம் கைது செய்யப்பட்டனர்.
மேலும் அவர்கள் கொள்ளையடித்த நகை, கொலைக்கு பயன்படுத்திய வாகனம் மற்றும் ஆயுதங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட நபர்கள் 18 முதல் 27 வயதுடைய 6 இளைஞர்கள் மற்றும் இரு பெண்களும் ஆவார்கள்.
இன்றைய தினம் அவர்கள் கல்கிஸ்ஸ நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு உள்ளனர்.
ஆயுதங்கள் காட்டி நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் 6 இளைஞர்கள் மற்றும் இரு பெண்கள் கைது.
Reviewed by Madawala News
on
January 16, 2020
Rating: