முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரரான வட
மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பதூர்தீன் மொஹம்மட் ரிப்கானின் வெளிநாட்டுப் பயணத்தை உடன் தடை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன இன்று (05) குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு உத்தரவிட்டார்.
இதேவேளை, மன்னார் – தலைமன்னார் பகுதியில் 240 இலட்சம் ரூபா பெறுமதியான 40 ஏக்கர் காணிக்குப் போலி காணி உறுதிகளை தயார் செய்து கையகப்படுத்திக் கொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் இன்று கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்தபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன் கைதான நபரை இம்மாதம் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
மெட்ரோ
ரிஷாத் பதியுதீனின் சகோதரருக்கு வெளிநாடு செல்ல தடை... ( ஒருவர் விளக்கமறியல்)
Reviewed by Madawala News
on
December 05, 2019
Rating: