பௌஸியை எம்.பி பதவியிலிருந்து நீக்கும் கடிதத்தில் ஒப்பமிட்டார் அமரவீர.. ஒரு மாதத்தில் பதவி இரத்தாகும் .
பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பெளசியை ஸ்ரீ லங்கா
சுதந்திரக் கட்சியிலிருந்தும் நீக்குவதற்கான கடிதத்தில் நான் கையொப்பமிட்டு விட்டேன்.
இன்னும் ஒரு மாத காலத்தில்அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவியும் இரத்தாகும். அவர் விரும்பினால் நீதிமன்றினை நாடலாம் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
சபுகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தைப் பார்வையிடச் சென்ற அமைச்சர் மஹிந்த அமரவீர ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலே இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் பதிலளிக்கையில்,
“ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைகளுக்கு முரணாக கட்சியின் கட்டுப்பாட்டினை மீறியதனாலே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.
பெளசி மாத்திரமல்ல கட்சியின் கொள்கைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கட்சியின் கட்டுப்பாட்டினை மீறி செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் அனைவரையும் கட்சியிலிருந்து நீக்குவதற்கு கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது.
இத்தீர்மானம் எதிர்வரும் காலங்களில் நிறைவேற்றப்படும்.
ஒழுக்காற்று விசாரணை களின் பின்பு அவர்களுக்கு எதிரான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றார்.
-Vidivelli
ஏ.ஆர்.ஏ.பரீல்
பௌஸியை எம்.பி பதவியிலிருந்து நீக்கும் கடிதத்தில் ஒப்பமிட்டார் அமரவீர.. ஒரு மாதத்தில் பதவி இரத்தாகும் .
Reviewed by Madawala News
on
December 04, 2019
Rating: