ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுக் கூட்டம் கட்சித் தலைமையகமான
சிறிகொத்தவில் இன்று பிற்பகல் முதல் இடம்பெற்று வருகின்றது
எதிர்க் கட்சிப் பதவி மற்றும் பொதுத் தேர்தலை நோக்கிய அரசியல் நடவடிக்கைகள் என்பன குறித்து இதன்போது தீர்மானங்கள் எடுக்கபட்டு வருகின்றன.
இந்நிலையில்
எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாஸ எம் பியை நியமிக்க ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றக் குழு இன்று அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதேசமயம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் தொடர்ந்தும் இருப்பார். அது தொடர்பில் பின்னர் ஆராய தீர்மானிக்கப்பட்டது .
பாராளுமன்றம் மீண்டும் கூடும்போது இந்த நியமனம் குறித்து சபைக்கு அறிவிக்கப்படும்.அதன் பின்னரே சஜித் உத்தியோகபூர்வமாக எதிர்க்கட்சித் தலைவராக நியமனம் பெறுவார்.
எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாஸ தெரிவானார்.. கட்சித் தலைவராக ரணில் தொடர்ந்தும்...
Reviewed by Madawala News
on
December 05, 2019
Rating: