பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு 2400 ஸ்டேலிங் பவுண்கள் தண்டப் பணம் தீர்ப்பு.


கடந்த 2018 ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புலம்பெயர் 
தமிழ் மக்களை நோக்கி சைகை மூலம் அச்சுறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு இலண்டன், வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றம் 2400 ஸ்டேலிங் பவுண்கள் தண்டப் பணமாக அறிவித்து தீர்ப்பளித்துள்ளது.


கடந்த 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி, இலங்கையின் சுதந்திர தினத்தன்று லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் தமிழர்களை கழுத்தறுப்பது போன்று சைகை மூலம் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ எச்சரித்திருந்தார்.


அதன் பின்னர் அவர் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டதுடன், குற்றம் சாட்டப்பட்ட பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றினால் இந்த தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது.
பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு 2400 ஸ்டேலிங் பவுண்கள் தண்டப் பணம் தீர்ப்பு. பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு 2400 ஸ்டேலிங் பவுண்கள் தண்டப் பணம் தீர்ப்பு.   Reviewed by Madawala News on December 06, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.