கண் சத்திர சிகிச்சைகள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டன.


(எச்.எம்.எம்.பர்ஸான்)
கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் சமூகசேவைப் பிரிவு வருடாவருடம் நடாத்திவரும் இலவச கண் சத்திர
சிகிச்சை முகாம் அல்லாஹ்வின் உதவியுடன் இம்முறையும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஜம்இய்யாவின் பிரதித் தலைவர் எஸ்.எச்.அரபாத் சஹ்வி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் ஒன்றியம் தேசிய ரீதியாக மேற்கொண்டுவரும் இலவச கண் சத்திர சிகிச்சை முகாம் இம்முறையும் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் ஏற்பாட்டில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. இதில் கண்ணில் வெள்ளை படர்தல் நோயுள்ளவர்கள் இனங்காணப்பட்டு அவர்களுக்கான சத்திர சிகிச்சை நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டது.

இதில் தமிழ் முஸ்லிம் உறவுகள் கலந்து கொண்டு கண் சத்திர சிகிச்சையை இலவசமாக பெற்றுக் கொண்டனர் என்றார்.



கண் சத்திர சிகிச்சைகள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டன. கண் சத்திர சிகிச்சைகள்  வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டன. Reviewed by Madawala News on November 15, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.