மருத்துவர் ஷாபி கருத்தடை சத்திர சிகிச்சையை செய்ததாக குற்றம் சாட்டிய பெண் ஒருவர் கர்ப்பம்?


குருநாகல் போதனா வைத்தியசாலையின் மருத்துவர் மொஹமட் சிஹாப்தீன் ஷாபி நான்காயிரம் சிங்கள
பெண்களுக்கு கருத்தடை சத்திர சிகிச்சைகளை செய்துள்ளதாக குற்றம் சாட்டபப்ட்டு வந்தது அறிந்ததே..

மருத்துவர் ஷாபி நான்காயிரம் சிங்கள பெண்களுக்கு கருத்தடை சத்திர சிகிச்சை செய்துள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்ததுடன், அவரை கைது செய்து  அது குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளையும்  நடத்தியது அறிந்ததே..


மருத்துவர் ஷாபி, கருத்தடை சத்திர சிகிச்சையை செய்துள்ளாரா என்பதை மருத்துவ ரீதியில் உறுதிப்படுத்த அந்த பெண்களை மருத்துவப் பரிசோதனைக்கு வருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டதுடன், அந்த பெண்கள் எவரும் பரிசோதனைக்கு வரவில்லை.


இந்த நிலையில் கருத்தடை சத்திர சிகிச்சைக்கு உள்ளடக்கப்பட்டதாக முறைப்பாடு செய்த பெண்களில் ஒருவர் கர்ப்பமடைந்துள்ளார். இந்த பெண் மருத்துவப் பரிசோதனை மூலம் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இது சம்பந்தமான பரிசோதனை அறிக்கைகளின் பிரதிகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என சிங்கள இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

விபரம் : https://www.lankanewsweb.net/sinhala/90-special-news/51482

கருத்தடை சத்திர சிகிச்சைக்கு உள்ளடக்கப்பட்டதாக கூறப்பட்ட பெண் கர்ப்பமடைந்துள்ளதால்,  இந்த பெண்கள் மூலமே கருத்தடை சத்திர சிகிச்சை என்ற கதை பச்சை பொய் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

மருத்துவர் ஷாபி கருத்தடை சத்திர சிகிச்சையை செய்ததாக குற்றம் சாட்டிய பெண் ஒருவர் கர்ப்பம்? மருத்துவர் ஷாபி கருத்தடை சத்திர சிகிச்சையை செய்ததாக குற்றம் சாட்டிய பெண் ஒருவர் கர்ப்பம்? Reviewed by Madawala News on November 14, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.