ஆட்களை கடத்தியதாக சொல்லப்படும் வெள்ளை வானின் சாரதி என்று கூறி ஒருவரை நேற்று செய்தியாளர் மாநாட்டிற்கு அமைச்சர் ராஜித கொண்டுவந்த விவகாரம் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பெரும் கருத்து மோதல்களை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் பிரசாரங்கள் முடிவடையும் தருவாயில் இவ்வாறான செயற்பாடுகள் கட்சிக்கு பின்னடைவை தருமென ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் சுட்டிக்காட்டியதையடுத்து அமைச்சர் ராஜித தலைமையில் இன்று நடக்கவிருந்த மற்றுமொரு செய்தியாளர் மாநாடு பிற்போடப்பட்டுள்ளது.
வெள்ளை வானின் சாரதி என்று நேற்று கருத்து வெளியிட்ட நபர் அமைச்சு ஒன்றில் சாரதியாக பணிபுரிவதாகவும்,உரிய ஆதாரங்கள் இன்றி அப்படியான கருத்துகளை வெளியிடுவது எதிர்தரப்பு ஆதரவாக மாறிவிடலாமெனவும் அரசின் இறுதிக்கட்டத்தில் இப்படியான அறிவித்தலை மேற்கொண்ட ஒருவரை கைது செய்யாமல் அல்லது அவரை விசாரணைக்கு உட்படுத்தாமல் இருப்பதும் மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்துமென ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர் .
கடந்த காலங்களில் வெள்ளைவான் விவகாரம் சமூகத்தில் பெரும் தாக்கம் ஒன்றை ஏற்படுத்தியிருந்த நிலையில் ராஜித்தவின் செயற்பட்டால் இனி மக்கள் அப்படியான குற்றச்சாட்டுக்களை நம்பும் நிலைமை இருக்காதென அந்த உறுப்பினர்கள் கட்சித் தலைவர் ரணிலிடம் எடுத்துக் கூறியுள்ளனர் என அறியமுடிந்தது.
தமிழன lk
ராஜித்த ஏற்பாடு செய்த வெள்ளை வேன் விவாகரம்..ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பெரும் கருத்து மோதலில்
Reviewed by Madawala News
on
November 11, 2019
Rating: