மஹிந்த தேசப்பிரியவை பதவி விலகுமாறு கோரி போராட்டம் செய்தவர் கைது.


தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவை பதவி விலகுமாறு கோரி யாழ்ப்பாணத்தில்
போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.


யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இன்று மாலை தம்பிராசா என்பவர் உண்ணாவிரத போராட்டத்தினை மேற்கொண்டிருந்தார்.


இவர் பொலிஸாரால் இன்று மாலை  கைது செய்யப்பட்டுள்ளார்.


ஜனாதிபதி தேர்தல் தபால் மூல வாக்களிப்பின் போது, கொழும்பு மாவட்டத்தில் உள்ள தபால் மூல வாக்களிப்பில் ஈடுபடுபவர்களின் பெயர் விபரங்கள் தனிச் சிங்கள மொழியில் வழங்கப்பட்டது.


இதனை தமிழ் மொழியில் தருமாறு கோரியிருந்த போதும், அந்த பெயர் விபரங்கள் தமிழ் மொழியில் வழங்கப்படவில்லை.


இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவை பதவி விலகுமாறு கோரியும் உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்திருந்தார்.


அவர் போராட்டத்தினை ஆரம்பித்து சிறிது நேரத்திலேயே யாழ்.மாவட்ட தேர்தல்கள் அலுவலக அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கு அமைய யாழ்.பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் இணைப்பாளர் தம்பிராசா என்பது குறிப்பிடத்தக்கது.

மஹிந்த தேசப்பிரியவை பதவி விலகுமாறு கோரி போராட்டம் செய்தவர் கைது. மஹிந்த தேசப்பிரியவை பதவி விலகுமாறு கோரி போராட்டம் செய்தவர் கைது. Reviewed by Madawala News on November 14, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.