கொழும்பு ரோயல் கல்லூரியில் வாக்களிப்பு நிலையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த 50 அதிகாரிகள் வைத்தியசாலையில் அனுமதி.
கொழும்பு ரோயல் கல்லூரியில் வாக்களிப்பு நிலையத்தில்
கடமையில் ஈடுபட்டிருந்த 50 அதிகாரிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உணவு விஷமடைந்த காரணத்தினால் அவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை வழங்கப்பட்ட உணவு விஷமாகியமையே இதற்கு காரணம் என கொழும்பு தேசிய வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதுவரையில் அனைத்து அதிகாரிகளும் சிகிச்சைக்காக வைத்தியசாலை அறைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு ரோயல் கல்லூரியில் வாக்களிப்பு நிலையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த 50 அதிகாரிகள் வைத்தியசாலையில் அனுமதி.
Reviewed by Madawala News
on
November 15, 2019
Rating: