ஏறாவூரில் சஜீத் பிரமதாசவை ஆதரித்து, முஸ்லிம் காங்கிரஸின் முதலாவது தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம்...

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்
 , ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சருமான அலி ஸாஹிர் மௌலானா 
அவர்களது வழிகாட்டலில் புதிய ஜனநாயக முன்னனியின் அபேட்சகர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம் , 
ஏறாவூர் நகர முதல்வர் ஐ.ஏ. வாஸித் தலைமையில் தற்போது ஏறாவூர் புன்னைக்குடா வீதியில் (வலயக்கல்வி அலுவலகத்துக்கு எதிரில்) இடம்பெற்றுக்கொண்டுள்ளது.


இக்கூட்டத்தில் சிறீலங்கா முஸ்லிம் ஹாங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் அமைச்சர் அல் ஹாஜ் றவூப் ஹக்கீம், இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம்,சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ஹரீஸ், கௌரவ மன்சூர்,கௌரவ தௌபீக்,கௌரவ நஸீர், மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ZA.நஸீர் அஹமட், கிழக்கின் முன்னாள் ஆளுனர் ரோஹித போகல்லாகம, முன்னாள் மாகண சபை உறுப்பினர்கள்,உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள்,அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்துக்கொண்டுள்ளார்கள்.


ஏறாவூரில் சஜீத் பிரமதாசவை ஆதரித்து, முஸ்லிம் காங்கிரஸின் முதலாவது தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம்... ஏறாவூரில் சஜீத் பிரமதாசவை ஆதரித்து, முஸ்லிம் காங்கிரஸின் முதலாவது தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம்... Reviewed by Madawala News on October 18, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.