கோட்டாபய ராஜபக்ச வென்றாலும், ரணில் தான் பிரதமர்.



ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிபெற்றாலும் பிரதமரா
க ரணில் விக்கிரமசிங்கவே தொடர்ந்து பதவிவகிப்பார் என பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்தார்.


கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.


அவர் மேலும் கூறுகையில்,
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிபெற்றாலும் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவே தொடர்ந்து பணியாற்றுவார்.



ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்க வேண்டுமென்றால் பாராளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவை கோட்டாபய ராஜபக்ஷ பெற்றுக்கொள்வது கட்டாயமாகும். 


அவ்வாறு இல்லாது பிரதமர் பதவிக்கு வேறு நபர்களை நியமிக்க முடியாது.


19ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் நான்கரை வருடங்கள் வரை பாராளுமன்றத்தை கலைக்க முடியாது. 


அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தான் இந்த அரசாங்கத்தின் ஆயுட்காலம் முடிவடையவுள்ளது. அதுவரை பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவால் தொடர முடியும்.
பாராளுமன்றத்தை கலைக்க முடியாமென்ற நீதிமன்ற தீர்ப்பு குறித்து அனைவரும் அறிவார்கள்.


இதனை நான் ஒரு ஊகமாக கூறும் போதும் கோட்டாபய ராஜபக்ஷவால் ஒருபோதும் ஜனாதிபதித் தேர்தலை வெற்றிக்கொள்ள முடியாது என்றார்.
கோட்டாபய ராஜபக்ச வென்றாலும், ரணில் தான் பிரதமர். கோட்டாபய ராஜபக்ச வென்றாலும், ரணில் தான் பிரதமர். Reviewed by Madawala News on October 18, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.