முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்குளி பிரதேசத்தில், பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து,
சிசுவொற்றின் சடலம், நேற்று (07) மாலை மீட்கப்பட்டுள்ளது.
119 பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, சம்பவ இடத்துக்கு வருகைதந்த பொலிஸார், 30 அடி ஆழமான கிணற்றிலிருந்து, சிசுவின் சடலத்தை மீட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த முந்தல் பொலிஸார், சிசுவின் தாயான 33 வயதுடைய பெண்ணை கைதுசெய்துள்ளனர்.
கணவனை பிரிந்து தனது 11 வயதுடைய குழந்தையுடன் வாழ்ந்துவந்த குறித்த பெண், கட்டுநாயக்க பகுதியிலுள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றியபோது, நபரொருவருடன் ஏற்பட்ட தொடர்பால் கருத்தரித்துள்ளாரென, பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
கருத்தரித்துள்ளதை தனது உறவினர்கள், சுற்றத்தாரிடம் மறைத்து வாழ்ந்துவந்த இந்தப் பெண், 7 ஆம் திகதி முற்பகல், தன்துடைய வீட்டில் குழந்தையை பிரசுவித்துள்ளதுடன், பிரசவ கடமைகளை தானே மேற்கொண்டுள்ளாரெனவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சிசுவின் சடலம் மரண பரிசோதனையின் பின்னர், புத்தளம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,
கைதுசெய்யப்பட்ட குறித்த பெண், பொலிஸ் பாதுகாப்புடன் புத்தளம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாரென,பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில், முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
ஒரு தாயின் கொடூர செயல். #இலங்கை
Reviewed by Madawala News
on
October 08, 2019
Rating: