மூவர் உயிரிழந்துள்ளனர்.
நேற்றிரவு பெய்த கன மழையின் காரணமாக வீட்டுக்கு அருகில் இருந்த மரமொன்று முறிந்து வீட்டின் மீது வீழ்ந்துள்ளது.
வெலிமடை பிரதேச சபைக்கு அருகில் உள்ள தற்காலிக வீட்டில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
இந்த அனர்த்தத்தில் பெண் ஒருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10, 14, 18 வயதுடையவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், சம்பவத்தில் காயமடைந்த 22 வயதுடைய ஆணொருவர் வெலிமடை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உயிரிழந்தவர்கள்
1 : U . சுறேஜனி
2: பிரசாந்த குமரன்
3: ராதா கிருஷ்ணா
சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வீடொன்றில் மரம் முறிந்து விழுந்ததில் பெண் உட்பட இளம் வயதினர் மூவர் உயிரிழந்த சோகம்.
Reviewed by Madawala News
on
October 13, 2019
Rating: