பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் தப்பிச்சென்ற சம்பவம் தொடர்பில் பெலியத்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் ஒருவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
தங்காலை உதவி பொலிஸ் அத்தியட்சகர் சனத் அமரசிங்க இதனைக் கூறியுள்ளார்.
பெலியத்த பொலிஸ் நிலையத்தின் சிறைக்கூடத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் நேற்று (07) மதியம் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர் தப்பிச்சென்ற போது கடமையில் இருந்த கான்ஸ்டபிள் ஒருவரே பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் சனத் அமரசிங்க கூறியுள்ளார்.
சிறைக்கூடத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நபர் தப்பி ஓட்டம்.
Reviewed by Madawala News
on
October 08, 2019
Rating: