பேருந்து ஒன்று பாதையை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் மாணவர்கள் உட்பட 28 பேர் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் டிக்கோயா வனராஜா பகுதியிலே இன்று (08) பிற்பகல் 03 மணியவில் விபத்து இடம்பெற்றுள்ளது.
ஹட்டன் நகர பகுதியிலுள்ள பாடசாலைகளில் கல்விப்பயிலும் பொகவந்தலாவ பிரதேச மாணவர்களை ஏற்றிச்சென்ற பாடசாலை சேவை பேருந்தே இவ்வாறு பாதையை விட்டு விலகி 15 பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் பேருந்தில் பயணித்த 18 மாணவர்கள் உட்பட 28 பேர் சிறுகாயமுற்ற நிலையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் மேலதிக விசாணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற தனியார் பேருந்து பள்ளத்தில் விழுந்து விபத்து.
Reviewed by Madawala News
on
October 08, 2019
Rating: