ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தேர்தல் சட்டங்களை மீறிய 103 சம்பவங்கள் தொடர்பில்
முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கபே எனப்படும் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது.
இந்த முறைப்பாடுகளில் அதிகளவான முறைப்பாடுகள், வேட்புமனு தாக்கல் இடம்பெற்ற நேற்று (07) செய்யப்பட்டுள்ளன.
நேற்று முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளின் எண்ணிக்கை 96 ஆகும்.
அதற்கு முன்னதாக 7 முறைப்பாடுகள் மாத்திரமே முன்வைக்கப்பட்டிருந்தாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் மட்டும் தேர்தல் சட்டங்களை மீறியது தொடர்பில் 96 முறைப்பாடுகள்.
Reviewed by Madawala News
on
October 08, 2019
Rating: