சாய்ந்தமருது பிரதேச 13 பள்ளி வாயல்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டன.

(ஷய்பான் அப்துல்லாஹ்)
சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பள்ளிவாசல்களை  முஸ்லிம் சமய 
பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் பதிவு செய்யப்பட்டு அதற்கான பதிவுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.


சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எம்.ஐ.ஜூஹைர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலக பிரதம இலிகிதர் ஏ.எல்.ஏ.றசீட், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள்  திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஏ.அசீம், கலாச்சார அபிவிருத்தி உதவியாளர் ஏ.எச்.சபீக்கா, கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.எஸ்.ஜெஸீரா உள்ளிட்ட சாய்ந்தமருது பிரதேச பள்ளிவாசல்களின் நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.


சாய்ந்தமருது பிரதேசத்தில் சாய்ந்தமருது ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் உள்ளிட்ட 13 பள்ளிவாசல்களுக்கு இப்பதிவுச் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இப்பிரதேச பள்ளிவாசல்களின் நிர்வாகிகள் வக்பு சபைக்கு விடுத்த வேண்டுகோளுக்கமைய இந்தப் பதிவுச் சான்றிதழ் வழங்கும் நடைமுறையினை இப்பிரதேசத்தில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சாய்ந்தமருது பிரதேச 13 பள்ளி வாயல்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டன. சாய்ந்தமருது  பிரதேச 13 பள்ளி வாயல்கள், முஸ்லிம் சமய  பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டன.   Reviewed by Madawala News on October 18, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.