இன்று காலை 8 மணியளவில் எல்பிட்டிய போலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அட்டகொஹட்ட வங்குவ
என்ற இடத்தில் அளுத்கமை இல் இருந்து எல்பிட்டிய நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமா பஸ் வண்டியில் சென்று கொண்டிருந்த நபர் ஒருவர் மீது அதே பஸ்ஸினுள் இருந்த மற்றுமொரு நபரால் நடத்தபட்ட துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்து எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் ஊராகஸ்மங் சந்தி என்ற இடத்தை சேர்ந்த 41 வயது ரஞ்சித் ஜெயவர்தன என தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கி பிரயோகம் நடத்திய நபர் தப்பியோட்டம்.
இன்று காலை பஸ்ஸினுள் துப்பாக்கி சூடு. ஒருவர் உயிரிழப்பு.
Reviewed by Madawala News
on
September 06, 2019
Rating: