கொழும்பு நகரில் ஏற்படும் வாகன நெரிசல்களால் பல்வேறு விதத்திலும் நாளொன்றுக்கு ஒரு
பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாக அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.
வாகன நெரிசல், சூழல் மாசடைதல், கால விரயம் போன்றவைகளினால் இந்த நட்டம் ஏற்படுவதாக துறைசார்ந்த நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.இதற்கிணங்க ஒரு வருடத்திற்கு 397பில்லியன் நட்டமாவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
கொழும்பு துறைமுக நகர நெடுஞ்சாலைக்கான நிர்மாணப்பணிகள் நேற்று பிரதமரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
கொழும்பு வாகன நெரிசல் ; நாளொன்றுக்கு 100 கோடி ரூபா நட்டம்
Reviewed by Madawala News
on
September 11, 2019
Rating: