(எச்.எம்.எம்.பர்ஸான்)
மின்னல் தாக்கியதில் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காவத்தமுனை புதுவெளிப் பாலம் பகுதியில் வயல் வேலை செய்து கொண்டிருக்கும் போது இன்று (19) மாலை தாக்கிய மின்னலினால் மீராவோடை எம்.பி.ஸீ.எஸ்.வீதியைச் சேர்ந்த முஸ்தபா அஸ்பர் (மீன் வியாபாரி) வயது 46 என்பவர் இவ்வாறு மரணித்துள்ளார்.
மின்னல் தாக்கத்தில் மரணமடைந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக தற்போது வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மின்னல் தாக்கி ஓட்டமாவடி - மீராவோடை அஸ்பர் வபாத்.
Reviewed by Madawala News
on
September 19, 2019
Rating: