நல்லாட்சி ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று ஆஜராகிறார் சஜித்



தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கான முறைசாரா நியமன விவகாரம் தொடர்பில் வாக்குமூலம்
பதிவுசெய்வதற்காக அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்கு அழைப்பு விடுத்துள்ளது.

திறைசேறியின் முகாமைத்துவ சேவைத் திணைக்களத்தின் அனுமதியின்றி, தேசிய வீடமைப்பு அதிகார சபைக்காக முறைசாரா நியமனங்களை  வழங்கியுள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளுக்காகவே, வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு இந்த அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. 

இதன்படி இன்று காலை 09.30 அளவில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. 

இதேவேளை, மேற்படி விசாரணைகளுக்காக தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் சாகர பலன்சூரியவுக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

நல்லாட்சி ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று ஆஜராகிறார் சஜித் நல்லாட்சி ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று ஆஜராகிறார் சஜித் Reviewed by Madawala News on September 20, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.