ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் யார் என்பதை இறுதி செய்ய
இன்று மாலை பிரதமர் ரணில் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் ஹக்கீம் மாத்திரம் கலந்துகொண்டுள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.
பங்காளிக் கட்சித் தலைவர்கள் சிலர் இந்த கலந்துரையாடலை புறக்கணிக்கவுள்ளனர் என ஏற்கனவே அறியமுடிந்தது.
இந்த நிலையில் பங்காளி கட்சித்தலைவர்கள் ரிஷாத் , சம்பிக மனோ மற்றும் திகா ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என கூறப்பட்டது.
இந்த கலந்துரையாடல் தொடர்பில் கருத்து வெளியிட்ட சஜித் பிரேமதாச அமைச்சர் நாளை குறித்த கட்சி தலைவர்களை மீண்டும் சந்திக்க உள்ளதாக குறிப்பிட்டார்.
இன்று இடம்பெற்ற சந்திப்பில் ஆக்கபூர்வாக ஒன்றும் நடக்கவில்லை என கூறப்பட்டது.
பங்காளி கட்சிகளுடனான கூட்டத்திற்கு ஹக்கீம் மாத்திரமே வந்தார் !!
Reviewed by Madawala News
on
September 19, 2019
Rating: