முல்லைத்தீவில், மாங்குளம் பொலிஸ் பிரிவின் முறிகண்டி பகுதியில் இடம்பெற்ற விபத்தில்
புலம்பெயர்ந்த பிரித்தானிய தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து இன்று பிற்பகல் 4.40 மணியளவில் கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழக வளாகத்தின் பிரதான வீதிக்கு அண்மையில் ஏ9 வீதியில் இடம்பெற்றுள்ளது.
தென்னிலங்கையிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த காரும் கிளிநொச்சியிலிருந்து முறிகண்டி நோக்கி பயணித்த பேருந்தும் விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் காரை செலுத்திய சாரதியே சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
இவர் தீபன் என அழைக்கப்படும் பிரித்தானிய பிரஜை என அடையாளம் காணப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் பல்வேறு சிரமங்களின் மத்தியில் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
விபத்து இடம்பெற்ற சம்பவம் தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவத்தில் சாரதி தவிர்ந்து வேறு எவரும் பயணித்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கார் விபத்தில் இலங்கையை சேர்ந்த பிரித்தானிய பிரஜை உயிரிழப்பு.
Reviewed by Madawala News
on
September 05, 2019
Rating: