தேர்தலை இலக்காகக் கொண்டு மஹிந்த சார்பு தொழிற்சங்கங்கள் போராட்டங்களை முன்னெடுக்கின்றன.


தேர்தலை இலக்காகக்கொண்டு மஹிந்த சார்பு தொழிற்சங்கங்கள் போராட்டங்களை முன்னெடுக்கின்றன
என ஐக்கியதேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார். வியாழக்கிழமை காலை கொழும்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

நேற்று நாடு முழுவதும் பல தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டன இந்த போராட்டங்களின் பின்னனியில் மஹிந்த ராஜபக்சவே உள்ளார். தேர்தல் காலங்களில் நாட்டில் குழப்பங்களை தூண்டிவிட்டு இவர்கள் வாக்கு சேகரிக்க முயற்சி செய்கின்றனர்.

இன்று தொழிற்சங்கங்க சுதந்திரமாக தமது போராட்டங்களை முன்னெடுத்துச்செல்ல சுதந்திரத்தை வழங்கியது நாமே. கடந்த ஆட்சியில் இவ்வாறான போராட்டங்கள் நடைபெற்றால் அடுத்தநாள் அவர்களின் வீடுகளுக்கு வெள்ளைவேன் வந்த வரலாறே காணப்பட்டது. ஆயிரம் ரூபாவது உயர்த்தி தாருங்கள் என கேட்கும் வல்லமை கடந்த அரசின் காலத்தில் இந்த தொழிசங்கங்களுக்கு இருக்கவில்லை.

நேற்று ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்துவரும் ஓரிரு நாட்களில் ஐக்கியதேசிய கட்சியின் செயற்குழு மற்றும் பாராளுமன்ற குழு இணைந்து வெற்றிபெறும் வேட்பாளரை தெரிவு செய்யும்.

இவர்கள் என்ன குழப்பங்கள் செய்தாலும் நாம் பெயரிடும் வேட்பாளர் நவம்பர் 17 ஆம் திகதி ஜனாதிபதியாக பதவி ஏற்பது உறுதி என தெரிவித்தார்.
தேர்தலை இலக்காகக் கொண்டு மஹிந்த சார்பு தொழிற்சங்கங்கள் போராட்டங்களை முன்னெடுக்கின்றன. தேர்தலை இலக்காகக் கொண்டு மஹிந்த சார்பு தொழிற்சங்கங்கள் போராட்டங்களை முன்னெடுக்கின்றன. Reviewed by Madawala News on September 19, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.