பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட பிரதேச சபை
உறுப்பினர் மற்றும் அவரது சகோதரியை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவர்களை எதிர்வரும் 16 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மாரவில நீதவான் நீதிமன்றம் இன்று (11) உத்தரவு பிறப்பித்துள்ளது.
பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் வென்னப்புவ பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் துலக்க்ஷி சமோதரி மற்றும் சகோதரி ஆகியோரே கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்திய சகோதரிகளுக்கு மீண்டும் விளக்கமறியல்.
Reviewed by Madawala News
on
September 11, 2019
Rating: