ஹஸ்பர் ஏ ஹலீம்_
தம்பலகாம பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை
விகாரையில்" உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்" இரத்ததான நிகழ்வொன்று இன்று(13) இடம் பெற்றுள்ளது
குறித்த இரத்த முகாமானது கிண்ணியா தளவைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் பலரும் இரத்தங்களை வழங்கி இரத்த வங்கி பிரிவுக்கு ஒத்துழைப்பு நல்கினார்கள்.
இதனை கிண்ணியா தளவைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவின் பொறுப்பதிகாரி டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா ,டாக்டர் சிதாரா ஆகியோர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
முள்ளிப்பொத்தானை விகாரையில்" உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்" இரத்ததான நிகழ்வு.
Reviewed by Madawala News
on
September 13, 2019
Rating: