நேற்றைய தினம் அவசர அமைச்சரவை கூட்டம் முடிந்த பின்னர் ஊடகங்களுக்கு அமைச்சர்
ஹக்கீம் கூறிய கருத்துக்கு தொலைபேசியில் அவரை தொடர்பு கொண்டு பிரதமர் ரனில் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாக நம்பகமான தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்யும் யோசனை நேற்று முன்வைக்கப்பட்ட நிலையில் அதற்கு ஹக்கீம் உள்ளிட்ட அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர்.
அதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் ஹக்கீம் இந்த நடவடிக்கையின் பின்னணியில் பிரதமர் ரணில் செயற்பட்டிருப்பதாக கண்டுபிடித்திருப்பதாகவும், இது தோல்வியின் விளிம்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாக கருதுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த கருத்துக்கு பிரதமர் ஹக்கீமை தொடர்பு கொண்டு தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சர் ஹக்கீம் கூறிய கருத்துக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு எதிர்ப்பு வெளியிட்ட பிரதமர் !
Reviewed by Madawala News
on
September 20, 2019
Rating: