எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு கல்கொட அத்தே ஞானசார தேரரை போட்டியிட
பல்வேறு தரப்புகள் அவரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளதாக பொதுபல சேனா தரப்பில் இருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் 14 ம் திகதி கொழும்பில் இடம்பெற உள்ள மாநாடு ஒன்றில் இது தொடர்பிலான தீர்மானத்தை அவர் அறிவிப்பார் என கூறப்படுகிறது.
அவ்வாறு அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் அவரை ஆதரிக்க பல்வேறு தரப்பினர் முன்வர உள்ளதாக பொதுபல சேனா தரப்பில் இருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோதாபய ராஜபக்ஷவின் சிங்கள பௌத்த வாக்களை அவரிடம் இருந்து பிரித்து எடுக்கவே ஞானசார தேரர் களமிறக்கப்பட உள்ளதாக எதிர்தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
ஞானசார தேரர் ஜனாதிபதி தேர்தல் களமிறங்க முஸ்தீபு ! இறுதி தீர்மானம் 14 ம் திகதி !!
Reviewed by Madawala News
on
September 10, 2019
Rating: