கஞ்சிபான இம்ரான் அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு
அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
தொலைபேசி ஊடாக பொலிஸ் அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காகவே கஞ்சிபான இம்ரான் அரசாங்க பகுப்பாய்வு திணைக்களத்திற்கு இன்று (19) அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
வெளிநாடு ஒன்றில் இருந்து பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் தற்போது சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.
கஞ்சிபான இம்ரான் சிறைக்காவலர்களால் கொழும்பு பிரதம நீதவான் முன்னிலையில் கடந்த 17 ஆம் திகதி ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது பொலிஸார் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், சந்தேகநபரான கஞ்சிபான இம்ரானை எதிர்வரும் 19 ஆம் திகதி குரல் பரிசோதனைக்காக உட்படுத்த அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் முன்னிலைபடுத்துமாறு உத்தரவிட்டிருந்தது.
இதன் பின்னரே கஞ்சிபான இம்ரானை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையின்படி, வாழைத்தோட்ட பொலிஸாரால் முன்னிலைப்படுத்தப்பட்ட கஞ்சிபான இம்ரானுடன் தொடர்புகளை பேணிய கேமதாசன் துஷாந்தன் எனப்படும் சுசாந்த என்பவரிடம் இருந்து 20 கிராமுக்கும் அதிகமான ஹெரோயின் போதை பொருள் கைபற்றப்பட்டதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது.
அந்த சந்தர்பத்தில் வெளிநாடு ஒன்றில் இருந்த கஞ்சிபான இம்ரான், தொலைபேசி ஊடாக குறித்த சுற்றிவளைப்புடன் தொடர்புடைய இரு பொலிஸ் அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்தாக தெரிவித்த வாழைத்தோட்ட பொலிஸார், இதன் அடிப்படையில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபராக கஞ்சிபான இம்ரானை பெயரிட்டுள்ளனர்.
கஞ்சிபான இம்ரான் அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு....
Reviewed by Madawala News
on
September 19, 2019
Rating: