ஐக்கிய தேசிய கட்சியை அதிகாரத்திற்கு கொண்டு வருவதற்கே நாம் அனைவரும் முயற்சிப்பதாக
அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
நேற்று (09) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சிகளின் கூட்டங்களே சஜித் பிரேமதாசவினால் நடாத்தப்படுகின்றன என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பிரதமரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் இதன்போது கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாச இருவரும் கலந்துரையாட உள்ளதாகவும், அவர்கள் இருவரும் தந்தையும் மகனும் போன்றவர்கள் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
ரணில் விக்கிரமசிங்கவும் சஜித் பிரேமதாசவும் தந்தையும் மகனும் போன்றவர்கள்.
Reviewed by Madawala News
on
September 10, 2019
Rating: