சிறப்பு அமைச்சரவையை அழைக்கலாமா என கேட்டு ஜனாதிபதி தான் என்னை காலை 8.16 மணிக்கு அழைத்தார் ; ரணில் பதிலடி
20 வது திருத்தம் பற்றி விவாதிக்க சிறப்பு அமைச்சரவையை அழைக்கலாமா
என கேட்டு ஜனாதிபதி காலை 8.16 மணிக்கு தன்னை அழைத்தார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வதற்காக தனது தேவைக்காக அமைச்சரவை கூட்டப்பட்டதாக பிரதமரால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று கூறியிருந்தார்.
இந்நிலையில் அமைச்சரவைக் கூட்டம் பிரதமரின் தேவைக்கமையவே கூட்டப்பட்டதாக ஜனாதிபதி கருத்திற்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிக்கையொன்றின் மூலம் பதிலளிக்கும்போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
நன்றி : ஆதவன்
சிறப்பு அமைச்சரவையை அழைக்கலாமா என கேட்டு ஜனாதிபதி தான் என்னை காலை 8.16 மணிக்கு அழைத்தார் ; ரணில் பதிலடி
Reviewed by Madawala News
on
September 22, 2019
Rating: