வேனிலிருந்து வீசப்பட்டு 6 வயது சிறுவன்
அன்ஷாப் உயிரிழந்த சோகம்.
நள்ளிரவு(22)நேரம், கண்டியிலிருந்து ஏறாவூர் நோக்கி பயணித்த வேன் ஒன்றுடன் ரேஸ் கார் ஒன்று மோதியதில் வேனில் பயணித்த ஏறாவூரை சேர்ந்த அன்ஷாப் எனப்படும் 6 வயது சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
நேற்று(21) கண்டியில் நடந்த திருமண நிகழ்வொன்றில் கலந்து கொண்டு மீண்டும் ஏறாவூர் நோக்கி பயணித்த வேளையிலேயே இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது.
எதிர்பாரா இந்த விபத்தின் காரணமாக வேனுக்குள் உறங்கிக் கொண்டிருந்த ஆறு வயதுடைய #அன்ஷாப் என்று சிறுவனே வெளியில் தூக்கி வீசப்பட்டு இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்)
ஜனாசா கண்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
நன்றி: முஹமட் நஸீர் -ஏறாவூர்.
-Almashoora Madawala News
வேனிலிருந்து வீசப்பட்டு 6 வயது சிறுவன் அன்ஷாப் உயிரிழந்த சோகம்.
Reviewed by Madawala News
on
September 22, 2019
Rating: