போலி ஆவணங்களைத் தயாரித்த நிலையமொன்று சுற்றிவளைக்கப்பட்டு 3 பேர் கைது.


   வத்தளை - கல்யாணி மாவத்தைப் பகுதியில் போலி ஆவணங்களைத் தயாரித்த நிலையமொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
இதன்போது மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வத்தளைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


   வத்தளை, கனேமுல்ல மற்றும் மருதங்கடவல பகுதிகளைச் சேர்ந்தவர்களே குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


   அரச அதிகாரிகள், காணிப் பதிவாளர் அலுவலகம், சட்டத்தரணி, அதிபர், இலங்கை துறைமுக அதிகார சபை, திருமண பதிவாளர், கிராம உத்தியோகத்தர், பிரதேச செயலாளர் ஆகியோரின் முத்திரைகளைப் பயன்படுத்தி, போலி ஆவணங்கள் இச்சந்தேக நபர்களினால் தயாரிக்கப்பட்டுள்ளன.


   இந்த சுற்றிவளைப்பில், போலி ஆணவங்கள் சில கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் வத்தளைப் பொலிஸார் மேலும்  குறிப்பிட்டுள்ளனர்.

( ஐ. ஏ. காதிர் கான் )
போலி ஆவணங்களைத் தயாரித்த நிலையமொன்று சுற்றிவளைக்கப்பட்டு 3 பேர் கைது. போலி ஆவணங்களைத் தயாரித்த நிலையமொன்று சுற்றிவளைக்கப்பட்டு 3 பேர் கைது. Reviewed by Madawala News on September 22, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.