அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு சொந்தமாக புத்தளம், வில்அடி பிரதேசத்திலுள்ள வீட்டில்
பொலிஸ் அதிரடிப்படையினர் நேற்று(19) விசேட சோதனை நடத்தியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வீட்டில் ஆயுதங்கள் வைத்திருப்பதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் பொலிஸ் தலையைகத்தில் ஸ்தாபிக்கப்பட்ட விசேட முறைப்பாட்டு பிரிவில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்கவினால், செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்.பி. திஸாநாயக்கவினால், செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய ரிஷாத் பதியுதீன் வீட்டில் சோதனை.
Reviewed by Madawala News
on
August 20, 2019
Rating: