கோட்டபாய மீது நம்பிக்கை வைக்க எமது நாட்டு மக்கள் மீண்டும் தயாரில்லை : JVP


கட்சியும் பழையது, கொள்கையும் பழையது, ஆளும் பழையவர் என்றிருக்கும்
 போது நாட்டில் மாற்றமொன்றைச் செய்வார் என்று அவரில் நம்பிக்கை வைக்க எமது நாட்டு மக்கள் மீண்டும் தயாரில்லையென மக்கள் விடுதலை முன்னிணி அறிவித்துள்ளது.


ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறித்து ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் கூறியுள்ளார்.



அவர்கள் உருவாக்கியுள்ள கட்சி பெயர் 
புதிதாக இருந்ததற்கு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பகுதியாகும் எனவும், அவரது கொள்கை 1956 இல் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கொண்ட கொள்கையே ஆகும் எனவும் கடந்த மஹிந்த ராஜபக்ஸ ஆட்சியில் ஒரு முக்கிய புள்ளியாக இருந்து செயற்பட்டவர் எனவும், அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை வைத்துப் பார்க்கும் போது அவரினால் நாட்டில் புதுமை படைக்க முடியும் என எதிர்பார்க்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



இதற்கு முன்னர் இருந்த தலைவர்கள் இந்த மூன்றையும் வைத்துக் கொண்டு நாட்டுக்காக எதனையும் சாதிக்க முடியாதவர்களாக காணப்பட்டனர். 

அது அவ்வாறிருக்கும் போது இந்த தனி நபரில் நம்பிக்கை வைக்க எமது நாட்டு மக்கள் தயாரில்லையெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். D C
கோட்டபாய மீது நம்பிக்கை வைக்க எமது நாட்டு மக்கள் மீண்டும் தயாரில்லை : JVP கோட்டபாய மீது நம்பிக்கை வைக்க எமது நாட்டு மக்கள் மீண்டும் தயாரில்லை : JVP Reviewed by Madawala News on August 12, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.