சஜித்தை பிரதமராக்கும் சிறிசேனவின் முயற்சி மீண்டும் தோல்வியில் முடிந்தது ..



ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் சஜித்பிரேமதாசாவை  பிரதமராக்குவதற்கான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முயற்சி மீண்டும் தோல்வியடைந்துள்ளது.

சஜித்பிரேமதாசாவை பிரதமராக்கி புதிய அமைச்சரவையை உருவாக்குவதற்கான முயற்சிகளை கடந்த வாரம் சிறிசேன மேற்கொண்டுள்ளார்.

சஜித்பிரேமதாசாவை பிரதமராக்கவேண்டும் என 113 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதத்தை வழங்கினால் தான் அவரை பிரதமராக்க தயார் என சஜித்தின் நெருங்கிய சகாவான அமைச்சரிடம் சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து சஜித் ஆதரவாளர்கள் பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் புதிய அரசாங்கத்தை  அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர்.

எனினும் பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதனை ஏற்றுக்கொள்ளாததன் காரணமாக இந்த  முயற்சி கைவிடப்பட்டுள்ளது.

இதேவேளை சஜித்பிரேமதாசவும் இதனை விரும்பவில்லை என அவரின் நெருங்கிய ஆதரவாளரான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

துரோகி முத்திரை தன் மீது குத்தப்படலாம் ஐக்கியதேசிய கட்சி ஆதரவாளர்கள் தன்னை விட்டு விலகிச்செல்லக்கூடும் என சஜித் தெரிவித்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சஜித்தை பிரதமராக்கும் சிறிசேனவின் முயற்சி மீண்டும் தோல்வியில் முடிந்தது .. சஜித்தை பிரதமராக்கும் சிறிசேனவின் முயற்சி மீண்டும் தோல்வியில் முடிந்தது .. Reviewed by Madawala News on August 25, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.