கொம்பனித் தெரு, செபல் வீதியில் அமைந்துள்ள அழகுகலை நிலையத்தின் முகாமையாளர் 5 பேர் கொண்ட
குழுவால் இரும்பு பொல்லால் தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்து உள்ளார்.
இன்று (12) அதிகதலை குறித்த பகுதிக்கு தனது காதலியுடன் வேனில் வந்து இறங்கிய வேளை, சில இளைஞர்கள் அவர்களை நேக்கி கேலி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை தொடர்ந்து ஏற்பட்ட வாய்த்தர்கம் இறுதியில் கைகலப்பில் சென்றடைந்துள்ளது.
முத்தையா வீதி பகுதியில் அழகுகலை நிலையத்தின் முகாமையாளர் இரும்பு பொல்லால் தாக்கப்பட்டதாகவும் அவருக்கு வயது 47 எனவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட 5 இளைஞர்களையும் விமானப்படையினர் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 5 பேரும் 17 முதல் 24 வயதுக்கிடைப்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொம்பனித் தெரு அழகுகலை நிலைய முகாமையாளர் அடித்துக்கொலை.. 5 இளைஞர்கள் கைது.
Reviewed by Madawala News
on
August 12, 2019
Rating: