மஹிந்த காலத்தில் பாதுகாப்பு இருந்தது எமது காலத்தில் குண்டு வெடித்தது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்..
யாழ்பானத்தில் உள்ள மக்கள் சுதந்திரமாக வாழ விரும்புதாக பிரதமர் ரனில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.
யாழில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் மேலும் தெரிவித்ததாவது,
யாழ்பானத்தில் உள்ள மக்கள் சுதந்திரமாக வாழ விரும்புகின்றனர்.அவர்களை நான் சந்தித்த போது மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில், கோத்தாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக இருந்த காலத்தில் நாட்டில் பாதுகாப்பு இருந்ததாகவும் எதிர்காலத்தில் அவர்களுடன் இணைந்து செயல்பட உள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
எமது காலத்திலேயே குண்டு வெடிப்புகள் இடம்பெற்றது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன.அதே நேரம் குண்டு வெடித்த அதே தினத்தில் சந்தேக நபர்களை எம்மால் கைது செய்ய முடிந்தது என அவர் குறிப்பிட்டார்.
மஹிந்த காலத்தில் பாதுகாப்பு இருந்தது எமது காலத்தில் குண்டு வெடித்தது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்..
Reviewed by Madawala News
on
August 16, 2019
Rating: