ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கான சட்டம் நீக்கப்படுவதாக அமைச்சர்
அகில விராஜ் காரியவசம் அவர்களை மேற்கோள் காட்டி இணையதளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தியில் எவ்வித உண்மை இல்லை.
இன நல்லிணக்கத்திற்கான செயற்பாடுகளில் முன்னின்று செயற்படும் அமைச்சர் என்ற வகையிலும் கல்வி கட்டமைப்பில் அனைத்து இன,மதத்தவர்களுக்கும் சம அந்தஸ்து வழங்க உறுதுணையாக நின்று செயற்படும் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் இவ்வாறான உரையை எங்கும் நிகழ்த்தவில்லை. அத்துடன் குறித்த இணையத்தள செய்தியில் எங்கு நடந்த நிகழ்வில் கலந்து கொண்டு அமைச்சர் இந்த கருத்தை கூறினார் என்பது குறித்து செய்தியில் குறிப்பிடப்படவில்லை. எனவே இவ்வாறான உண்மைக்கு புறம்பான செய்திகளை நம்ப வேண்டாம் என மக்களிடம் நாம் கோரிக்கை விடுகின்றோம்.
இப்படிக்கு
அமைச்சரின் ஊடகப்பிரிவு
முஸ்லிம்களுக்கு எதிரான அறிக்கை விவகாரம்.... உண்மைக்கு புறம்பான செய்திகளை நம்ப வேண்டாம் !
Reviewed by Madawala News
on
August 16, 2019
Rating: