அவசரகால சட்டம் நீக்கம் ! முஸ்லிம் பெண்கள் முகத்திரை அணியத்தடையில்லை ; பொலிஸ் ஊடகப்பேச்சாளர் உறுதிப்படுத்தியதாக மிப்லாள் மௌலவி தெரிவிப்பு ..
அவசரகால சட்டம் நீக்கப்பட்டதை அடுத்து முஸ்லிம் பெண்கள் முகத்திரை
அணிய விதிக்கப்பட்ட தடையும் நீக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குனசேகர தன்னிடம் உறுதிப்படுத்தியதாக ஐக்கிய சமாதான முன்னணியின் தலைவர் மிப்லாள் மௌலவி தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள பொலிஸ் ஊடக பேச்சாளர்
தடைசெய்யப்பட்ட அமைப்புகள் பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த தடை நீங்காது எனவும் முகத்திரை தடை செய்யப்பட்டமை அவசர கால சட்டத்தில் என்பதால் அவசரகால சட்டம் நீங்கப்பட்டுள்ளாதால் முகத்திரை தடையும் நீங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குனசேகர தன்னிடம் குறிப்பிட்டதாக குறிப்பிட்டார்.
அவசரகால சட்டம் நீக்கம் ! முஸ்லிம் பெண்கள் முகத்திரை அணியத்தடையில்லை ; பொலிஸ் ஊடகப்பேச்சாளர் உறுதிப்படுத்தியதாக மிப்லாள் மௌலவி தெரிவிப்பு ..
Reviewed by Madawala News
on
August 25, 2019
Rating: