இனங்களுக்கு இடையில் நம்பிக்கை முறிந்தால் நாடு என்ற ரீதியில் முன்னோக்கி செல்ல முடியாது
என எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
மத சுதந்திரம் மற்றும் நம்பிக்கைக்கான ஐக்கிய நாடுகளின் ஒருங்கிணைப்பாளர் அகமட் ஷாஹீத் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் அவரை சந்தித்த போது எதிர்க்கட்சி தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த மத சுதந்திரம் மற்றும் நம்பிக்கைக்கான ஐக்கிய நாடுகளின் ஒருங்கிணைப்பாளர், இலங்கையில் மதம் மற்றும் இனங்களுக்கு இடையில் சிறந்த நல்லிணக்கம் காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இனங்களுக்கு இடையில் நம்பிக்கை முறிந்தால் நாடு என்ற ரீதியில் முன்னோக்கி செல்ல முடியாது : மகிந்த
Reviewed by Madawala News
on
August 24, 2019
Rating: